சென்னை சிறுமி பலாத்காரம்: மிருகங்களுக்கு மனிதாபிமானம் தேவையில்லை.. தூக்கிலிடுங்கள்.. தமிழிசை ஆவேசம்!
Share

{ channai girl raped tamilisai angry }
மயக்க ஊசி போட்டு 11வயது மாற்றுத்திறனாளி சிறுமி 15 பேரால் பலாத்காரம் சென்னை: அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை காவலாளி, பிளம்பர், லிப்ட் ஆப்ரேட்டர் என 15 பேர் கடந்த 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமிக்கு மயக்க ஊசி மற்றும் போதை ஊசி போட்டு இந்த கொடூரத்தை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர். சிறுமியால் பேச முடியாததை பயன்படுத்தி இந்த கொடூர செயலில் வயது வித்தியாசமின்றி இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 17 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள போலீசார் அவர்களை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 17 பேருக்கும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறுமி வன்கொடுமைக்கு காரணமான அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு அதுதான் சரியான தண்டனை என்றும் மிருகங்களுக்கு மனிதாபிமானம் தேவையில்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக பேசினார்.
Tags: channai girl raped tamilisai angry
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 11வயது மாற்றுத்திறனாளி சிறுமி 15 பேரால் 7 மாதமாக பலாத்காரம்: சட்டக்கல்லாரி மாணவர்களால் தாக்கப்படும் குற்றவாளிகள்!
- புதிதாக அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு; பாமக நிறுவனர் புதிதாக அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு ராமதாஸ் அறிவித்த சவால்??
- டெண்டர் விடுவதில் விஞ்ஞானப்பூர்வ ஊழல் செய்தது திமுக தான்: அமைச்சர் ஜெயக்குமார்!
- நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி!
- நான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்! – இஸ்லாமியர் வாக்குமூலம்!
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த ஹிமா தாஸின் கண்ணீர் – இந்தியாவின் சந்தோஷம்!